சிறுவர்களுக்கு அறிவியல் முன்னேற்றங்களைச் சொல்ல, கதை வடிவமே மிகச் சிறந்த வடிவமாக இருந்து வந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பின் இருக்கும் சுவாரசியமான வரலாறே, சிறுவர்களை படிக்கத் தூண்டுகிறது.
கதை வடிவம், சிறுவர்களுக்கு அறிவியலை மட்டும் சொல்வதில்லை, கூடவே, அதைப் போன்ற கண்டுபிடிப்புகளில் ஈடுபாடு கொள்ளவும் உற்சாகம் கொள்ளவும் தூண்டுகோலாக அமைகிறது. கதையாக படித்தால் ஒரு செய்தி, ஒரு கண்டுபிடிப்பு, சிறுவர்கள் மனத்தில் ஆழப்பதிந்துவிடும் என்பது உறுதி.
என். சொக்கன் சிறுவர்களுக்காக கோகுலம் மாத இதழில் எழுதிய அறிவியல் கதைகளே இங்கே புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. எளிமையான மொழி, சுலபமான சொல்லும் முறை, நீரோட்டமான நடை என்று சிறுவர்களின் மொழித்திறனை மனத்தில் கொண்டு எழுதப்பட்ட கதைகள் இவை.